நிகழ்வுகள்
1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
1915 – பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் பிரசெல்சு நகரைக் கைப்பற்றியது.
1946 – இலங்கையின் புதிய சோல்பரி அரசியல் யாப்பை ஏற்றுக் கொள்ளும் அறிவிப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.[1]
1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1972 – இலங்கையில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆனது.
1974 – அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக தென் கொரியாவில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1987 – ஈரான் – ஈராக் போர்: ஈராக்கிய போர் விமானம் ஒன்று அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டனர், 21 பேர் காயமடைந்தனர்.
1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
1992 – தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று-நாள் எதிர்ப்புப் போராட்டங்களில் இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – மலாவிவில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
1997 – சயீர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1998 – தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2004 – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
2006 – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ஒரிசுகானி மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.
2007 – வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான தொடருந்து சேவை 1953 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக இடம்பெற்றது.
2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது.
2014 – வடக்கு வாவோசில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.
பிறந்த நாள்
1920 – பி. சாந்தகுமாரி, தென்னிந்திய நடிகை, பாடகி
1938 – கே. ஜமுனா ராணி, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
1945 – பி. எஸ். சந்திரசேகர், இந்தியத் துடுப்பாளர்
1956 – சீனு மோகன், தமிழக மேடை, திரைப்பட நடிகர் (இ. 2018)
1967 – முகம்மது நசீது, மாலைத்தீவுகளின் 4வது அரசுத்தலைவர்
1974 – செந்தில் ராமமூர்த்தி, அமெரிக்க நடிகர்
1988 – நிக்கி ரீட், அமெரிக்க நடிகை, பாடகி
நினைவு நாள்
1961 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (பி. 1865)
1998 – சரோஜினி யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
2007 – நகுலன், தமிழக எழுத்தாளர் (பி. 1921)
2014 – சி. கோவிந்தன், தமிழறிஞர், புலவர்
2014 – சௌகான் மகாலத், லாவோஸ் அரசியல்வாதி (பி. 1955)
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (நோர்வே)
அரசமைப்பு நாள் (நவூரு)
விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)
உலக தொலைத்தொடர்பு தினம்
உலக உயர் இரத்த அழுத்த தினம்