நிகழ்வுகள்
1856 – இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1859 – சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
1880 – கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.
1894 – பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
1902 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.
1913 – கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.
1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.
1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
1963 – ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.
1973 – அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
1989 – தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.
2010 – ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.
2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
2013 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
பிறந்த நாள்
1885 – தாரா சிங், சீக்கிய அரசியல், சமயத் தலைவர் (இ. 1967)
1907 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1989)
1915 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2001)
1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)
1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2015)
1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்
1937 – அனிதா தேசாய், இந்திய-அமெரிக்க எழுத்தாளர்
1938 – நீல. பத்மநாபன், தமிழக எழுத்தாளர்
1953 – வில்லியம். ஈ. மோர்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர், இயற்பியலாளர்
1961 – இயன் கிளென், இசுக்கொட்டிய நடிகர்
1966 – விஜயசாந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி
1968 – போரிசு கெல்பண்ட், உருசிய-இசுரேலிய சதுரங்க வீரர்
1974 – மது பாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்
1979 – மிண்டி காலிங், அமெரிக்க நடிகை
1987 – லியோனல் மெசி, அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரர்
நினைவு நாள்
1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் (பி. 1894)
1992 – மகாராஜபுரம் சந்தானம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)
2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)
2007 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (பி. 1967)
2008 – லியோனிடு ஹுர்விக்ஸ், நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1917)
2020 – எஸ். நடராஜசிவம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நடிகர்
சிறப்பு நாள்
ஒலிம்பிக்கு நாள்